ஆப்நகரம்

அக்காவின் செயலை நேரில் பார்த்த தம்பி..! சென்னையில் நிகழ்ந்த படுகொலை

சென்னை அருகே இரண்டாவது கணவருடன் நெருக்கமாக இருந்த அக்காவை அடித்து கொலை செய்த தம்பி

Samayam Tamil 5 Jan 2021, 8:32 pm
சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் அப்பகுதியில் சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளுடன் தனிமையில் இருந்து வந்த சுப்புலட்சுமி அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வசித்து வந்தார்.
Samayam Tamil file pic


இந்த சூழலில், சுப்புலட்சுமியின் தம்பி பிரதாப்பிற்கு அக்கா வேறொருவருடன் உறவில் இருப்பது பிடிக்கவில்லை. இந்நிலையில், சம்பவ நடந்த அன்று சுப்புலட்சுமியின் வீட்டுக்கு பிரதாப் சென்றுள்ளார். அப்போது, சுப்புலட்சுமி இரண்டாவது கணவருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்துள்ளார்.

அதனால் ஆத்திரம் அடைந்த பிரதாப் சுப்புலட்சுமியை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து வந்த எண்ணூர் போலீசார் தடயங்களை சேகரித்த பின்னர் சுப்புலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை: 'உடல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டார்' - சின்னத்திரை நடிகை பகீர்

தொடர்ந்து பிரதாப்பை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தால் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி