ஆப்நகரம்

கணவனுக்கு பிறகு மச்சனன், அதன் பிறகு வேறொருவர்... கடைசியில் போன உயிர்...

தஞ்சை அருகே திருமண உறவை மீறிய காதலால் ஏற்பட்ட விரோதத்தில் கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 18 May 2020, 8:45 pm
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த உத்திராபதி என்பவரது மகன் சித்திரவேல். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது சகோதரன் லட்சுமணனின் மனைவி சாவித்திரி தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் சித்தரவேலுடன் வசித்து வந்தார்.
Samayam Tamil தஞ்சையில் கட்டிடத் தொழிலாளி கொலை


அப்போது சித்தரவேலுக்கும் அவரது சகோதரனின் மனைவிக்கும் இடையே முறைத் தவறிய உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே சாவித்திரி சிங்காநல்லூர் அருகே உள்ள இ.எஸ்.மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தபோது, உடன் பணியாற்றி வந்த வெள்ளளூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சித்திரவேலை பிரிந்த சாவித்திரி ராஜாவுடன் சில மாதங்களாக சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜாவின் கொடுமை தாங்காமல் ராஜாவை பிரிந்து மீண்டும் தனது கணவன் லட்சுமணன் இணைந்து விட்டார் சாவித்ரி.

பிறந்தநாள் இனிப்பு கொண்டு வந்த பணி பெண்ணுக்கு கிஸ் கொடுக்கும் அலுவலர்..!

இதனால் விரக்தியிலிருந்த ராஜா அடிக்கடி சித்திரவேலுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. 17ஆம் தேதி மாலை மதுபோதையில் சித்திரவேல் அவரது வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது, தனது கூட்டாளிகளுடன் சித்திரவேலின் வீட்டிற்கு வந்த ராஜா, சித்திரவேலுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதோடு, மூவரும் சரமாரியதாக தாக்கியதில் சித்திரவேல் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் சித்திரவேலுவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் வெள்ளளூர் பகுதியில் பதிங்கியிருந்த ராஜா உள்பட அவரது நண்பர்கள் ரவிக்குமார் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி