ஆப்நகரம்

கோவையில் ஃபைனான்ஸ் அதிபர் தற்கொலை..! அதிர வைத்த சம்பவம்...

கோவை அருகே தொழில் நஷ்டம் காரணமாக ஃபைனான்ஸ் அதிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Oct 2020, 5:08 pm
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து நேற்று இரவு10.30 மணி அளவில் ஒருவர் திடீரென குதித்ததாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாலையில் தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Samayam Tamil file pic


கோவை அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். மேலும்,போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட நபர் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சுப்ரமணி என்பது தெரியவந்தது.

இவர் கடந்த சில மாதங்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக விரக்தியடைந்த சுப்ரமணி காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் இருக்கட்டுங்க... 38 வயசு ஆளுக்கு 19 வயது மகள் எப்படீங்க? கதறும் தந்தை

கொரோனா ஊரடங்கில் கூலி தொழிலாளி முதல் தொழிலதிபர்கள் வரை பண நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அடுத்த செய்தி