ஆப்நகரம்

நள்ளிரவில் மது விருந்து.. துணை நடிகை மீது பாய்ந்த கேமராமேன்... சின்னத்திரை அதிர்ச்சி

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்து மது குடிக்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளர் கைது

Samayam Tamil 14 Jun 2022, 4:08 pm
சென்னை கொளத்துாரை சேர்ந்த 22 வயது பெண் சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் கொடுத்துள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சீரியல் நடிகை பாலியல் புகார்


வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் காசிநாதன் (42). இவர் சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார். இவருக்கும் பாதிக்கப்பட்ட துணை நடிகைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாகவும், அதை பற்றி பேச அப்பெண்ணை காசிநாதன் தனது வீட்டிற்கு இரவு நேரத்தில் அழைத்துள்ளார்.

அவரது வீட்டில் வைத்து இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை காசிநாதன் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதையடுத்து அப்பெண் தனது நண்பரை தொடர்பு கொண்டு தன்னிடம் காசிநாதன் தவறாக நடந்துக்கொள்வதாகவும் , தான் இருக்கும் இடம் குறித்து தெரிவித்துள்ளார்.

சோற்றில் விஷம் கலந்த பெற்றோர்... உஷார் படுத்திய பாட்டி... காதலனை கரம் பிடித்த மாணவி

இதையடுத்து அங்கு சென்ற அவரது நண்பர் பெண்ணை மீட்டார். இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் காசிநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சின்னத்திரையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி