ஆப்நகரம்

PMK: விசிக வைத்த செக்... மேட்டூர் பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏ மீது வழக்கு..!

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் பாமகவை சேர்ந்த சதாசிவம் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Aug 2022, 3:20 pm
மேட்டூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கொளத்தூர் போலீசார் தற்போது சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி