ஆப்நகரம்

'இந்த சின்ன மனுஷனுக்குப் பெரிய மனுஷன் மோடிதான்' - ஸ்டாலினை விமர்சித்த ராஜா மீது வழக்கு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பாஜக மூத்த தலைவர் எச் ராஜா விமர்சித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jan 2022, 9:25 pm
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 11ம் தேதி மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்தும், கரூர் நகர காவல்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil h raja


இதேபோல பஞ்சாப் அரசினை கண்டித்து 10 ம் தேதி கரூர் மாவட்ட பா.ஜ.க-வினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கரூர் நகர காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி போராட்டம் நடத்த முற்பட்ட பா.ஜ.க-வினருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், பாஜக பட்டியல் அணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் முன்பு, காவல்துறையினர் அட்டகாசம் செய்து அம்பேத்கரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக அதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பா.ஜ.க கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா சிறப்புரை ஆற்றினார்.

புதுச்சேரியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழக வாலிபர் கைது..!

அப்போது, தமிழக முதலமைச்சருக்கும் பிரதமர் மோடி தான். இந்த சின்ன மனுஷனுக்குப் பெரிய மனுஷன் மோடிதான். தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதனால், நான் அவரைத் தவறாகக் குறிப்பிடவில்லை" என்று பா.ஜ.க பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனையொட்டி, அனுமதியின்றி, ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் உள்பட, 200 பேர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி