ஆப்நகரம்

அரசு மதுபான கடை பாரில் கேசியர் வெட்டி கொலை..! கோவையில் பயங்கரம்

கோவையில் அரசு மதுபான கடை பாரில் கேசியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2022, 12:43 pm
சிவகங்கை மாவட்டம் கன்டானபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன் வயது 28. இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை அரசு மதுபான கடை எண் 1812 பாரில் பார் கேஷியராக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil kovai murder


இந்த நிலையில், இன்று காலை சிறுமுகை பாரில் வழக்கமாக பணியை மேற்கொண்டிருந்த கேசியரான காளையப்பனை கடை பாருக்குள் நுழைந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் சராமரி வெட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறை துனை கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோர் தடயங்களை கைப்பற்றி உயிரிழந்த காளைய்யன் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாரில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி