ஆப்நகரம்

TNPSC Scam: குரூப் 2ஏ முறைகேடு: அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்; வேட்டையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் சிலரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Feb 2020, 9:05 am
தமிழகத்தில் அரசு வேலைகளுக்கு நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
Samayam Tamil TNPSC


இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் மோசடி நடந்தது தெரியவந்ததை அடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி 41 துறைகளில் காலியாக உள்ள 1,953 இடங்களுக்கு குரூப் 2ஏ தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. இதில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 37 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர்.

சிறையில் ’டான்’கள்; ஹேப்பி மூடில் பிரபலங்கள் - டாட்டா காட்டிய போலீசார்!

குரூப் 2ஏ-ல் நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக பதவிகள் வழங்கப்படும். இதன் காரணமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் காவலர் சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவர் மூலமாக பணியில் சேர்ந்த அவரது அண்ணன் வேல்முருகன், ஜெயராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சுதாதேவி, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் விக்னேஷ், தூத்துக்குடியை சேர்ந்த அரசு ஊழியரான சுதா ஆகியோரை சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

துப்பாக்கி முனையில் 23 குழந்தைகள்; 8 மணி நேர போராட்டம் - இறுதியில் நடந்த அதிர்ச்சி!

இவர்களும் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுதாராணி என்பவர் குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் வாகன ஓட்டுநர் சம்பத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வேலை வாங்கி தருவதாக 100 பேரிடம் சுமார் 5 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி