ஆப்நகரம்

மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்துச் சென்ற இளைஞர்கள் - தேனியில் துணிகரம்

ஆண்டிப்பட்டியில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்துச் சென்ற இளைஞர்கள்.

Samayam Tamil 14 Nov 2021, 1:23 pm
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் வி.ஐ.பி முதல் தெருவில் வசித்து வருபவர் ரம்யாதேவி (வயது68). இவர் மதியம் தன்னுடைய மாட்டு கொட்டகை செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் திடீரென் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு, அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டனர்.
Samayam Tamil cctv


நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த ரம்யாதேவி கூச்சலிட்டார். இதனையடுத்து தெருவில் வசிப்பவர்கள் விரைந்து வந்து கீழே விழுந்து கிடந்த ரம்யா தேவியை மீட்டு, ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

மேலும், அந்த தெருவில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலையில் உள்ள ஓருவீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் பைக்கில் தப்பி செல்வது தெரிந்தது.


கோவை மாணவி மரணம்: கைதான பள்ளி முதல்வரிடம் தீவிர விசாரணை...

அந்த வீடியோவில் பதிவான காட்சிகளை கொண்டு மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். நகர் பகுதியில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி