ஆப்நகரம்

அரக்கர்களின் அத்துமீறல்... சுழன்று விழுந்த பெண்... தருமபுரியில் துணிகரம்

தருமபுரி குமாரசாமிபேட்டை அருகே சாலையில் நடந்து செல்லும் பெண்ணின் கழுத்தில் செயின் பறிக்கும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

Samayam Tamil 11 Mar 2022, 12:32 pm
தருமபுரி குமாரசாமிபேட்டை திருவிக நகரை சேர்ந்த குயிலன் என்பவரின் மனைவி லதா(48). இவர் நேற்று இரவு 7 மணியளவில் குமாரசாமிபேட்டை தட்சிணாமூர்த்தி தெருவில் மடம் அருகே பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிராக இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த 2 வாலிபர்கள் அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை பறிக்க முயற்சி செய்தனர்.
Samayam Tamil லதா
சாலையில் நடந்து செல்லும் லதா


ஆனால், அவர் கழுத்தில் இருந்த செயினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதால் பறிக்க முடியவில்லை.
இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து அதிவேகமாக பைக்கில் தப்பிசென்றனர். அவர்கள் இழுத்ததில் லதா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்துள்ளது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


காவல் துறையினர் மர்ம நபர்கள் குறித்து அருகே இருந்த ஒரு வீட்டில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த லதாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி சிறுமிகள் சண்டையில் மூக்கை நுழைத்த மேகலா மீது 2 வழக்கு..!

குமாரசாமி பேட்டை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த மர்ம நபர்களின் தங்க சங்கிலி பறிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி