ஆப்நகரம்

மகளுக்கு சொத்தை கொடுத்த தந்தை, டிராக்டர் ஏற்றி கொன்ற மகன்!

செங்கல்பட்டில் பாட்டன் வழி சொத்தை மகள்களுக்கும், மகன்களுக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்த தந்தையை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 17 Dec 2019, 10:22 pm
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனது அப்பா வழி‌ சொத்துக்களை ஏழுமலை என்பவர் தனது 3 மகள்களுக்கும் 2 மகன்களுக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தார். சொத்துக்களை மகள்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்ததை ஏற்க முடியாத, அண்ணாமலையின் மகன் ஏழுமலை டிராக்டர் ஏற்றி தந்தையைக் கொலை செய்தார்.
Samayam Tamil WhatsApp Image 2019-12-17 at 8.46.52 PM


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முருக்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. வயது 75. அண்ணாமலைக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகனைத் தவிர மீதமுள்ள 4 பேருக்கும் அண்ணாமலை திருமணம் செய்து வைத்துள்ளார்.

அண்ணாமலைக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்தை மகள்களுக்கும், மகன்களுக்குச் சமீபத்தில் சரி சமமாக தலா 3 ஏக்கர் ஒருவருக்கு எனப் பிரித்துக் கொடுத்துள்ளார். இப்படிச் சரி சமமாகப் பாகப் பிரிவினை செய்ததை ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் வளர்ந்த அண்ணாமலையின் மகன் ஏழுமலையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள்: கைது செய்த காவல்துறை!

அதே நேரத்தில் அண்ணாமலையின் மற்றொரு மகன் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தனது இறப்புக்குப் பிறகுத் தனது சொத்துக்களைப் பராமரிக்க ஏழுமலையை நியமித்து உயிலை அண்ணாமலை எழுதியிருந்தார்.


எனினும், சொத்துக்களைச் சரி பாதியாகத் தனது சகோதரிகளுக்கு வழங்கியதை ஏற்க முடியாத ஏழுமலை, தொடர்ந்து தனது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாகத் தந்தைக்கும் மகனுக்கும் சமீபத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில், தனது பாட்டன் சொத்தை தந்தை அண்ணாமலை சகோதரிகளுக்கு எழுதி வைத்து தன்னை ஏமாற்றி விட்டார் என ஏழுமலை ஊரில் கூறி வந்துள்ளார்.

ஸ்டாலினுக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பா?

இந்த பிரச்சினை இன்று பெரிதாகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, வயலில் வேலை செய்து கொண்டிருந்த தந்தை அண்ணாமலையை டிராக்டரால் ஏற்றி கொலை செய்தார். வயல் சொத்தை தனது மகள்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்ததற்காகத் தந்தையைக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலையைச் செய்த ஏழுமலை அந்த இடத்திலிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார். வழக்குப் பதிவு செய்துள்ள செங்கல்பட்டு காவல் துறை, தலைமறைவாகி உள்ள ஏழுமலையைத் தேடி வருகிறது.

அடுத்த செய்தி