தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல் ராஜ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (21). இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியுடன் திருச்செங்கோடு கோயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார்.
பின்னர் மறுநாள் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டும், நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த் வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி வழக்கை முடித்து வைத்த நீதிபதி சம்பத்குமார்; யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
அதனை அடுத்து முக்கிய குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை (42 வருடம்) விதிக்கப்பட்டது. எஞ்சியவர்களுக்கு 1 முதல் 3 ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த் நிலையில், கோகுல் ராஜின் தோழி சுவாதியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். புத்தகம் மீதும், குழந்தைகள் மீதும் சத்தியம் செய்து நீதிமன்றத்தில் உண்மையை கூருங்கள் என நீதிபதிகள் வலியுறுத்தினர். ஆனால், பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதிகள் கோகுல் ராஜ் கடைசியாக உலாவிய திருச்செங்கோடு கோயிலில் மற்றும் கொலை செய்யப்பட்டு கிடந்த தொட்டிபாளையம் ரயில் பாதை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அரசு தரப்பில், கோகுல் ராஜ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்று வாதிடப்பட்டது. யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பில்; எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று முன் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு யுவராஜ் உள்ளிட்டோரின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். மேலும்,மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று அறிவித்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். யுவராஜ் ஆயுள் முழுவதும்
கட்டாயம் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 பேர் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். தீர்ப்புக்கு பின்னர் குற்றவாளிகள் அனைவரும் சிறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் மறுநாள் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டும், நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த் வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி வழக்கை முடித்து வைத்த நீதிபதி சம்பத்குமார்; யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
அதனை அடுத்து முக்கிய குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை (42 வருடம்) விதிக்கப்பட்டது. எஞ்சியவர்களுக்கு 1 முதல் 3 ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த் நிலையில், கோகுல் ராஜின் தோழி சுவாதியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். புத்தகம் மீதும், குழந்தைகள் மீதும் சத்தியம் செய்து நீதிமன்றத்தில் உண்மையை கூருங்கள் என நீதிபதிகள் வலியுறுத்தினர். ஆனால், பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதிகள் கோகுல் ராஜ் கடைசியாக உலாவிய திருச்செங்கோடு கோயிலில் மற்றும் கொலை செய்யப்பட்டு கிடந்த தொட்டிபாளையம் ரயில் பாதை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அரசு தரப்பில், கோகுல் ராஜ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்று வாதிடப்பட்டது. யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பில்; எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று முன் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு யுவராஜ் உள்ளிட்டோரின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். மேலும்,மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று அறிவித்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். யுவராஜ் ஆயுள் முழுவதும்
கட்டாயம் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 பேர் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். தீர்ப்புக்கு பின்னர் குற்றவாளிகள் அனைவரும் சிறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.