ஆப்நகரம்

'ஏ.ஆர். ரகுமானால் ரூ.3 கோடி நஷ்டம்': வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது போடப்பட்ட நஷ்ட ஈடு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Samayam Tamil 24 Jul 2021, 4:09 pm
சென்னையைச் சேர்ந்தவர் காளியப்பன். இவர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2000ம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை வைத்து துபாயில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில், அந்த நிகழ்ச்சியினால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், மேலும் நிகழ்ச்சியின் காப்புரிமையை ஏ.ஆர். ரகுமான் தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று லாபம் பெற்றுவிட்டதகவும் கூறி 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏஆர் ரகுமான் தரப்பில், '' நிகழ்ச்சியினால் ஏற்பட்ட நஷ்டத்துக்கும் எனது கட்சிக்காரருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதுபோக, நிகழ்ச்சிக்காக பேசிய தொகையை கூட காளியப்பன் கொடுக்கவில்லை.

பாலியல் புகாரில் கைதான சிவசங்கருக்கு ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை..!

தேவையின்றி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டுள்ளார்'' என வாதம் வைக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில், இந்த பிரச்சினை ஏற்கனவே முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரச்சினை முடிந்ததா என்பதை குறித்து ஏஆர் ரகுமான் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, அண்மையில் நடந்த விசாரணையின்போது, எந்த சமரசமும் நடக்கவில்லை என ஏஆர் ரகுமான் தரப்பு வக்கீல் தெரிவிக்க, மனு தாரர் எந்த பதிலும் கூறவில்லை என்று எதிர் தரப்பு வக்கீல் கூற, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி