ஆப்நகரம்

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை: வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் மேல்முறையீடு வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Samayam Tamil 7 Jan 2022, 7:05 pm
பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
Samayam Tamil சென்னை கோர்ட் புகைப்படம்


லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஐஜி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிவந்த பெண் எஸ்பி கடந்த 2018ஆம் ஆண்டில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஐ.ஜி. மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலங்கானாவிற்கு மாற்றியும், அதன் விசாரணை அறிக்கைகளை 6 மாதத்தில் தாக்கல் செய்யவும் 2019 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் வழக்கில் பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

ரவுடி படப்பை குணா: மூன்று மாவட்டத்தில் ராஜ்ஜியம்... காவல்துறை என்னதான் செய்கிறது?

இதையடுத்து, 2019ல் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ. சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி