ஆப்நகரம்

மேலவளவு கொலை வழக்கு: சர்ச்சையைக் கிளப்பும் 13 பேர் விடுதலை!

மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரை எதிர்மனுதாரர்களாக சேர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 20 Nov 2019, 1:44 pm
மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Samayam Tamil மேலவளவு கொலை வழக்கு சர்ச்சையைக் கிளப்பும் 13 பேர் விடுதலை


பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படும் நிலையில், மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளான ராமர் உள்பட 13 பேர், எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

சாதி ஆணவம்: மகளை எரித்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்!

தமிழ்நாட்டையே உலுக்கிய கொலைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் வெளியே வந்தது விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அரசாணை நகலை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

யார் இந்த ரவுடி அமரன்? ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் வெட்டிக் கொல்லப்பட்டது ஏன்?

இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை உள்ளிட்ட ஆவணங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது பேசிய நீதிபதிகள், “குற்றவாளிகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தண்டனை வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. மேலும் மேலவளவு கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்? நல்லெண்ண அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். முன்கூட்டியே விடுதலை செய்ய தயார் செய்யப்பட்ட பட்டியலை நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.

“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா?”: ஐகோர்ட் கிளை

மேலும் விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி