ஆப்நகரம்

கொலைக்கு முன் மனைவியின் காலை முறித்த ஐ.டி. ஊழியர்... பரபரக்கும் விசாரணை

சென்னையில் ஐடி ஊழியர் தனது குடும்பத்தை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 29 May 2022, 12:09 pm
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41). இவர் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் மாதம் ஒண்ணே கால் லட்சம் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். பிரகாஷுக்கு காயத்திரி (39) என்ற மனைவியும் நித்யஸ்ரீ(13), ஹரி கிருஷ்ணன் (8) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர்.
Samayam Tamil crime murder suicide news


இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு காயத்திரி கால் முறிவு ஏற்பட்டு தனது சகோதரி வீட்டில் தங்கி வந்தார். சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்த வந்த பிரகாஷ் இரவு 11 மணி அளவில் மரம் அறுக்கும் எலக்ட்ரிக் ரம்பத்தால் மனைவி, குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் அதே ரம்பத்தால் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் வீட்டுக்கு சென்ற காயத்ரி செல்போனை எடுக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது சகோதரி, வேறொரு வீட்டில் வசிக்கும் தனது தந்தைக்கு போன் செய்து பிரகாஷின் வீட்டுக்கு சென்று பார்க்க சொன்னார்.

அதன்படி, காயத்ரியின் தந்தை அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையிலேயே நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். மேலும், பிரகாஷின் கழுத்தோரம் அந்த ரம்பம் ரத்த மையமாக ஓடி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ந்து போன காயத்ரியின் தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அதிக கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 19 ஆம் தேதியே அந்த ரம்பத்தை ஆன்லைன் மூலமாக பிரகாஷ் வாங்கி இருந்த பார்சலையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அத்துடன் பிரகாஷின் வீட்டில் இருந்த ரூ.3.50 லட்சத்துக்கான கடன் பத்திரத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரகாஷின் மனைவி காயத்ரிக்கு ஏற்கனவே ஒரு கால் முறிவு இருந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு மற்றொரு காலும் முறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், வீட்டுக்குள் ரத்தத்தின் நடுவே கால் தடம் பதிந்துள்ளதாகவும் அந்த கால் தடம் யாருடையது என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நான்கு பேர் தலையை துண்டித்த பேட்டரி ரம்பம்... சென்னையில் பகீர் க்ரைம் சீன்

கடன் தொல்லைதான் தற்கொலை, கொலைக்கு காரணம் என்றால் மனைவியின் காலை பிரகாஷ் ஏன் முறிக்க வேண்டும் என்றும் இவ்வளவு கொடூர முறையில் உயிரை ஏன் மாய்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கு ஆழமான சந்தேகங்களை எழுப்புகிறது.

அடுத்த செய்தி