ஆப்நகரம்

பள்ளி படிக்கட்டில் முடிந்த 14வயது சிறுவனின் வாழ்க்கை, சோகத்தில் பெற்றோர்!

சென்னை கேந்திர வித்தியாலா பள்ளியில் படித்து வந்த நவீன் என்ற 9ஆம் வகுப்பு மாணவன் படிக்கட்டில் கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2020, 10:08 pm
சென்னை ஆவடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரக் கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கட்டில் மாணவன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.
Samayam Tamil aid203556-v4-728px-Not-Fall-Down-Stairs-Step-1-Version-3


சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் கெளரவ் நவீன் சானிபோயினா. வயது 14. கேந்திர வித்யாலயாவில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது, நவீன் விளையாடிக் கொண்டே பள்ளி படிக்கட்டில் ஏறியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக நவீன் கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் நவீன் தலையில் பலமாகக் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியிலிருந்த மாணவர்கள் நேரில் பார்த்து அதிர்ந்து போய், பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் மனிதர்களுக்குப் பரவும் கொரோனா வைரஸ்: 4 பேர் பலி

ரத்த வெள்ளத்தில் மிதந்த நவீனை, ஆசிரியர்கள் மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் நவீன் நாடி துடிப்பு மிகவும் மோசமடைந்து வந்துள்ளது. இதனால், அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, நவீனை எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு நவீனை சோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்துக் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர், நவீன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..! என்ன நடக்கிறது தெரியுமா?

காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், நவீன் தவறி படிக்கட்டில் விழுந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுத் தொடர்பாகப் பள்ளியில் மாணவர்கள் உள்பட ஆசிரியர்கள் சிலரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

சிறுவன் இறப்பில் எந்த விதமான மர்மமும் இல்லை எனக் காவல் துறை தெரிவித்துள்ளது. அதே வேளையில், நவீனின் பெற்றோரும் எந்தவித சந்தேகமும் கிளப்பவில்லை. எனினும், 14 வயது சிறுவனின் இந்த மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி