ஆப்நகரம்

சென்னை அருகே பெற்ற மகனை கொன்ற தந்தை கைது!

சென்னை ராமாபுரம் அருகே பெற்ற மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 11 Mar 2019, 4:20 pm
சென்னை ராமாபுரம் அருகே பெற்ற மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil சென்னை அருகே பெற்ற மகனை கொன்ற தந்தை கைது!
சென்னை அருகே பெற்ற மகனை கொன்ற தந்தை கைது!


சென்னை ராமாபுரம், செந்தமிழ்நகர் வேம்புலி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லோகநாயகி. இவர்களது மகன் சதீஷ் (21), கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார். மகள் சங்கீதா மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

சக்திவேலுவுக்கும் அவரது மகன் சதீஷூக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் அனைவரும் இருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. லோகநாயகியும், மகள் சங்கீதாவும் அவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்திவிட்டு வேறு அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

ஆனால் ஆத்திரத்தில் இருந்த சக்திவேல், இன்று அதிகாலை 3 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த சதிஷை, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த லோகநாயகியும், சங்கீதாவும் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சக்திவேலை தடுக்க முயன்றபோது இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த ராயலாநகர் போலீசார், சதிஷீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்திவேலை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பெற்ற மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி