ஆப்நகரம்

ஸ்விகியில் வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் மோசடி

ஸ்விகி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 5 Jun 2019, 6:24 pm
சென்னை முகப்பேரைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு சங்கர் என்பவருடன் அண்மையில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் ஸ்விகி நிறுவனத்தில் இருவரும் இனைந்து பணியாற்றலாம் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil ஸ்விகி நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக மோசடி
ஸ்விகி நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக மோசடி


இதை நம்பிய பிரசாத், சங்கர் சொல்படி கேட்டு 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆண்ட்ராய்டு போன்களை வாங்கியுள்ளார். அவற்றை பிரசாத்திடம் இருந்து வாங்கிய சங்கர், ஸ்விகி நிறுவனத்தின் இணைத்து தருவதாக தெரிவித்துள்ளார்

ஆனால் அவர் எதுவும் செய்யாமல் இருந்துள்ளார். சங்கர் ஏமாற்றி வருவதை உணர்ந்த பிரசாத், இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், சங்கர் தன்னிடமிருந்து ஸ்மார்ட் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கேட்டு வாங்கிவிட்டார். ஆனால் அதை தற்போது நகைப் பறிப்பு, திருட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்.

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை மீட்டுத் தர வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரசாத்.

அடுத்த செய்தி