ஆப்நகரம்

தொடர் கொள்ளை: அவ்ளோ பெரிய சம்பவத்தை அசால்டா செஞ்சது இவங்க தானா?

சென்னை புறநகர்ப் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 50 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Oct 2019, 9:21 am
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகளவில் நடைபெறுகின்றன.
Samayam Tamil Untitled collage


சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பரசுராம் நகரில் வசித்து வருகிறார் முனிர் உசேன். தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக பணியாற்றும் இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு கடலூர் சென்றுள்ளார். இரு தினங்களுக்குப் பின் வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 40 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் வாகனங்களை திருடுதல், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் சுரேஷ் என்பவருக்கு வயது 21, சீனிவாசன் என்பவருக்கு 24 வயது. இவர்களுடன் ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளான். தலைமறைவாகியுள்ள பப்லு என்பவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இவர்களிடமிருந்து 50 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி