ஆப்நகரம்

சென்னையில் ரெட் லைட் ..! சுற்றி வளைத்த போலீஸ், 7 பேர் கைது..!

சென்னை அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவி உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 12 Nov 2020, 7:33 pm
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ளது சஞ்சீவராயன் கோயில் தெரு. இந்த தெருவில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் வெளியாட்கள் தொடர்ந்து வருவதும் போவதுமாக இருந்துள்ளளது. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் குறிப்பிட்ட வீட்டை கண்காணித்துள்ளனர்.
Samayam Tamil பாலியல் தொழில்


அப்போது, அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறாக பெண்களும் வந்து சென்றதையும் பார்த்துள்ளனர். இந்நிலையில், அதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தனிப்படை போலீசார் வீட்டை சோதனையிட்டதில், அந்த வீட்டில் குடித்தனம் நடத்தி வரும் கணவன், மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து பாலியல் தொழில் நடத்திவந்ததை உறுதி செய்தனர்.

மேலும், இந்த அதிரடி சோதனையில் 7 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில், மதன், செல்வி, சாஹிதா பானு, கார்த்தி, மகேஸ்வரி உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து பாலியல் தொஹிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், இந்த கும்பல் கணவன் மற்றும் குடும்பத்தை இழந்த பெண்களை குறிவைத்து அவர்களின் மனதை மாற்றி பணத்தாசையை தூண்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.


அண்ணியுடன் தாம்பத்தியம், மனைவிக்கு கொடுமை, பெண்ணின் பரிதாப மரணம்

தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலின் வலையில் சிறுமிகளும் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. ரகசிய துப்புவால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவத்தால் பாலியல் கும்பல் சிக்கியிருந்தாலும், சென்னையில் பல இடங்களில் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் பாலியல் தொழில்களை கண்டறிய சிறப்பு படைகள் வேகத்துடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் சிறுமிகள் மூளை சலவை செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

அடுத்த செய்தி