ஆப்நகரம்

சென்னை: சிசிடிவி கேமராக்கு அடியில் தூங்குவது போல் ஸ்கெட்ச்...

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோக் காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 18 Feb 2020, 1:39 pm
சென்னை ராஜிவ் காந்த் அரசு மருத்துவமனையில் பல்வேறு இன்னல்களை நோயாளிகளும், அவர்களைப் பார்க்க வரும் உறவினர்களும் அனுபவித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாகத் தண்ணீர் வசதி இல்லாமலும், பல்வேறு இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் கூறப்பட்டது.
Samayam Tamil WhatsApp Image 2020-02-17 at 10.04.43 PM


வித விதமான மோசடிகள் எனத் தொடர்ந்து சட்ட விரோத சம்பவங்கள் பல நிகழ்ந்து வந்த நிலையில், இப்போது சிசிடிவி கேமரா முன்பாக இளைஞர் ஒருவர் திருடும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வசித்து வருபவர் பவானி. இவர் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டு சிகிச்சைக்காகச் சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜிவ் காந்தி மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள 143வது வார்டில் பவானிக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு பெண் பலி, கூட்டம் கூட்டமாக ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டனர், மகாராஷ்டிரா பேருந்து விபத்து!

இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் பவானியைப் பார்ப்பதற்காக அவரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அதன் தொடர்ச்சியாகத் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியைச் சேர்ந்த பவானியின் மருமகன் முருகன் உள்ளிட்ட உறவினர்கள் 15ஆம் தேதி மாலை மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

மருத்துவமனை விதிமுறைப்படி, இரவில் நோயாளியுடன் தங்குவதற்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி இல்லாததாதல் பவானி உறவினர் 4 பேர் 143வது வார்டுக்கு வெளியே படுத்துத் தூங்கியுள்ளனர்.

அப்போது அதிகாலை மூன்று மணிக்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த முருகனுக்குப் பக்கத்தில் சென்று தூங்குவது போல் மர்ம நபர் ஒருவர் படுத்துள்ளார். படுத்த அடுத்த நொடி அந்த மர்ம நபர் முருகன் பாக்கெட்டில் இருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு அந்த பகுதியில் உட்கார அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டுள்ளார்.

“குதிரையில் ஏற உயர்வான சாதியில் பிறக்கணும்” ராணுவ அதிகாரிக்கு அடி உதை, சாதி வெறியால் அழியும் குஜராத்!

இந்த மர்ம நபரின் செயல்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. மறுநாள் காலை கண் முழித்த முருகன் தனது செல்போன், பணம் உள்ளிட்டவற்றைக் காணவில்லை என்பதை உணர்ந்தார். அதன்பின் மருத்துவமனை வளாகத்திலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று தனது உடைமைகள் திருடப்பட்டது குறித்து புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு அடையாளம் கண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி