ஆப்நகரம்

சென்னையில் நாய்-ஐ பாலியல் வன்புணர்வு செய்யும் நபர்: பரபரப்பு புகார்

சென்னையில் நாய்யை பாலியல் வன்புணர்வு செய்வதாக ஒருவர் மீது விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Feb 2019, 11:58 am
சென்னையில் நாய்யை பாலியல் வன்புணர்வு செய்வதாக ஒருவர் மீது விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil street-dogs


சென்னை, நந்தனத்தில் ஆல்மைட்டி விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் இயக்குநர் சாய் விக்னேஷ் காவல்நிலையத்தில் நாய்யை பாலியல் வன்புணர்வு செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். நந்தனத்தில் உள்ள ஒரு நபர் தெரு நாய்கள் ஆதரிப்பதுபோல், அதை பாலியல் வன்புணர்வு செய்வதாகவும், இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடந்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மீனாட்சி சுந்தரம் கூறுகையில்’ ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஒருவர் நாய்யை பாலியல் வன்புணர்வு செய்தார். அவரை குடியிருப்பு வாசிகள் அனைவரும் விரட்டினோம் ஆனால் அவர் இங்கிருந்துபோகவில்லை. இந்த சம்பவம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மேலும் பயத்தை உருவாக்குகிறது’ என்று தெரிவித்தார்.

விலங்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநர் சாய் விக்னேஷ் புகார் கொடுக்கும்போது சிசிடிவி காட்சிகளையும் காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார்.

இந்த சமப்வம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வரும் சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி கூறுகையில் ‘புகார் தெரிவித்தவர் கொடுத்த சிசிடிவி காட்சிகளில், அந்த நபர் நாயை பாலியல் வன்புணர்வு செய்வதுபோல் காட்சிகளும் இல்லை. அவர் அதிகமாக குடித்துவிட்டு நாயிடம் செல்லம் காட்டுவதுபோல் மட்டுமே இருக்கிறது. ஆனால் அங்கிருக்கும் நபர்கள் நாயை அந்த நபர் பாலியல் வன்புணவர்வு செய்வதாக கூறுகின்றனர். எனவே சமந்தப்பட்ட நபரை விசாரிக்கும்போதுதான் உண்மைகள் வெளியாகும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி