ஆப்நகரம்

பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை பாதுகாப்பான நகரமாம்! அட உண்மைதான் நம்புங்க!

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 24 Oct 2019, 11:18 am
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Untitled collage (4)


ஒவ்வொரு நகரத்திலும் எவ்வளவு குற்றங்கள் நடைபெற்றுள்ளது என்பதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் டில்லி, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களை ஓப்பிடுகையில் சென்னையில் குறைவான குற்றங்களே நிகழ்ந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

கதுவா வழக்கு: நாங்கள் யாரையும் துன்புறத்தவில்லை: ஜம்மு டிஜிபி

நாட்டிலேயே அதிகமான குற்றச் செய்ல்கள் நடைபெறும் நகரமாக டில்லி விளங்குகிறது. அங்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக 11,684 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன.

மும்பையில் 5431 குற்றங்களும், கொல்கத்தாவில் 1231 குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமுள்ள 19 நகரங்களில் சென்னை 16ஆவது இடத்தில் உள்ளது. அதாவது 874 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவிலேயே பாலியல் வழக்குகள் அதிகமாக பதிவானதில் உ.பி. முதலிடம் ...

மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் குறைவான குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளது எனக் கூறப்பட்டாலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் சென்னையில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

சென்னையில் 2016ஆம் ஆண்டு 705 குற்றச் செயல்களும், 2017ஆம் ஆண்டு 874 குற்றச் செயல்களும் நடைபெற்றுள்ளன. இதில் பெண்களுக்கு எதிராக 642 குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிராக 249 குற்றங்களும் நிகழ்ந்துள்ளன.

அடுத்த செய்தி