ஆப்நகரம்

தலை முடியை வெட்டச் சொன்னதற்குத் தற்கொலை செய்த கொண்ட சிறுவன்!

சென்னையில் தனது மகன் அதிக முடி வளர்த்து வந்தது பிடிக்காமல், அவனது அம்மா திட்டியதில் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2020, 7:32 pm
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். அதே பகுதியில் தனியார்ப் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil chennai-class-7-boy-commits-suicide


இவர் கடந்த 3 மாதங்களாகத் தனது தலை முடியை வளர்த்து வந்துள்ளார். ஸ்ரீனிவாசன் தலை முடியை வளர்ப்பது அவரது அம்மாவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

ஸ்ரீனிவாசனின் அப்பா மணியும், முடியை அளவோடு வைத்துக் கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் இந்த சண்டை ஸ்ரீனிவாசனுக்கும் அவரது அம்மாவுக்குமிடையே மிகப்பெரிய சண்டையாக மாறிப் போகியுள்ளது.

நிர்பயா வழக்கு, உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீனிவாசன் வீட்டில் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டிற்குச் சென்று ஸ்ரீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்கவுன்ட்டர் ஆரம்பம்!

சம்பவம் குறித்துக் கேட்டறிந்த காவல் துறையினர், ஸ்ரீனிவாசன் வீட்டிற்கு விரைந்து அவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முடி வெட்டுவதற்குக் கோபப்பட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி