ஆப்நகரம்

சென்னை: “அப்பா வைத்தியத்திற்கு காசு வேண்டும்” என போலி தங்கம் விற்ற பெண்!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலி தங்க நாணயத்தை விற்று ஏமாற்றி வந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 16 Dec 2019, 10:52 pm
சென்னையில் உள்ள மருத்துவமனையில் பல்வேறு மோசடிகளில் நடைபெற்று வருவதாகப் புகார்கள் குவிந்து வரும் நிலையில், பெண் ஒருவர் வைத்தியத்திற்குப் பணம் வேண்டும் எனப் போலி தங்க நாணயத்தை விற்று வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Samayam Tamil Untitled (2)


சென்னை இராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை மிகவும் பிஸியாகவே காணப்படும். நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காகவும், சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திப்பதற்காக வந்து செல்கின்றனர்.

வெங்காயம் விலை குறைஞ்சிருக்கா இல்லையா?

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் 22 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், அவர்களிடம் சிகிச்சைக்குப் பணமில்லை எனக் கூறியுள்ள அந்த 21 வயது இளம்பெண், தான் வைத்திருக்கும் தங்க நாணயத்தை வைத்துக் கொண்டு ரூ. 500 மட்டும் கொடுத்து உதவுங்கள் என கவரிங் தங்க நாணயம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதை நம்பிய சிலர், இளம்பெண்ணுக்கு உதவுவதாக ரூ. 500 கொடுத்துத் தங்க நாணயத்தைப் பெற்று சென்றுள்ளனர்.

தங்க நாணயத்தைப் பெற்றவர்கள் சோதனை செய்தபோது அது போலி என்பது தெரியவந்தது. இதனால், அந்த போலி தங்க நாணயத்தைப் பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பலர் இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் அங்குக் குற்றச் செயலில் சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ப்ரியா என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் குமார பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

ப்ரியாவிடம் நடந்த விசாரணையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது காவல் துறைக்குத் தெரியவந்துள்ளது. குறிப்பாக மூதாட்டி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துத் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.


தங்கச் சங்கிலியைத் தொலைத்த மூதாட்டி முன் வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் நிலுவையிலிருந்த நிலையில், இப்போது அந்த புகார் தொடர்பான குற்றவாளி சிக்கியுள்ளதாக வண்ணாரப் பேட்டை காவல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சிறுமியை சீரழித்த வழக்கு : பாஜக எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு!!

ப்ரியாவிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில், அவரிடம் சுமார் 3 சவரன் தங்க நகை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ப்ரியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய வண்ணாரப் பேட்டை காவல் துறையினர் புழல், மத்தியச் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி