ஆப்நகரம்

'ஒரே நேரத்துல மூணு பேரு', இப்ப அந்த 3 பேரும் கைது..! ஆபாச பேட்டியால் வினை

சென்னையில் இளம்பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்த யூ டியூப் சேனல் தொகுப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது.

Samayam Tamil 12 Jan 2021, 9:37 pm
கையில் ஒரு மைக்கையும், கேமராவையும் தூக்கிக்கொண்டு இளசுகள் இருக்கும் இடங்களில் சுற்றி திரியும் சில யூ டியூப் சேனல்கள், அந்தரங்க கேள்விகளை அப்பட்டமாக கேட்டு, அதற்கு வரும் பதில்களை அப்படியே போட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. கேட்கும் கேள்விகள் சர்ச்சை என்று தெரிந்தும், இப்படி வீடியோக்களை போட்டால்தான் சீக்கிரம் ஃபேமஸ் ஆகலாம் என்ற எண்ணத்தில் அதையே வாடிக்கையாக வைத்து வரும் ஓரு சில யூ டியூப் சேனல்களுக்கு போலீசார் எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர்.
Samayam Tamil video grab image


அண்மையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 'சென்னை டாக்ஸ்' என்ற யூ டியூப் சேனல் எடுத்த பேட்டி வைரலானது. வழக்கம்போல, ஆபாச கேள்விகள் கேட்பதும், அதற்கு சங்கடமே படாமல் ஒரு பெண் பதிலளிப்பதுமான அந்த வீடியோ முகநூல், வாட்சப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி, கடும் விமர்சனங்களை பெற்று வந்தது.


இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சம்மந்தப்பட்ட சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சென்னை டாக்ஸ் சேனலின் தொகுப்பாளர் அசென் பாட்ஷா (23), ஒளிப்பதிவாளர் அஜய் பாபு (24), சேனல் உரிமையாளர் தினேஷ் ஆகியோரை விசாரிக்க வரவழைத்தனர்.


'நான் குளிப்பதை இரண்டு பேர் பார்ப்பார்கள்', கணவன் மென்டல், சென்னை அதிர்வு

பின்னர், சர்ச்சை வீடியோக்களை ஆதாரமாக வைத்துக்கொண்ட போலீசார், மூன்று பேர் மீதும் பெண்களை அவமதித்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு வழக்குகளை பதிவு செய்து மேற்கண்டவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம், அவர்களை மட்டுமில்லாமல், பொது இடங்களில் கல்லூரி மாணவிகளிடமும், இளம்பெண்களிடமும் இரட்டை அர்த்தங்களை கொண்ட கேள்விகள், ஆபாச கருத்துக்களை கேட்டு எப்பிசோடுகளை ஓட்டி வரும் மூன்றாம் தர யூ டியூப் சேனல்களை ஜெலுசில் போட வைத்துள்ளது. மேலும், இந்த கைது சம்பவத்தை அடுத்து, சமூக ஊடங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த செய்தி