ஆப்நகரம்

'நிலாவை பார்க்க ஆசை'... 25வது மாடியில் இருந்து விழுந்து உயிரை விட்ட சகோதரர்கள்..!

உத்தரப் பிரதேசத்தில் நிலாவை பார்க்க சென்ற சிறுவர்கள் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Oct 2021, 9:13 pm
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்ய நாராயணன் மற்றும் சூரிய நாராயணன் என்னும் இரட்டை மகன்கள் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அங்கு 9ஆம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு சிறுவர்கள் இரண்டு பேரும் பால்கனிக்கு சென்று நிலாவை பார்க்க வேண்டும் என்று தாயிடம் கேட்டுள்ளனர்.
Samayam Tamil building


அதற்கு மறுப்பு தெரிவித்த தாய், அறையை விட்டு வெளியே வரக்கூடாது இருவரும் உறங்குங்கள் என்று கூறிவிட்டு அவரது அறைக்கு சென்றுள்ளார். பின்னர் 1 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த தாய் மகன்களின் அறைக்கு சென்றுள்ளார். சிறுவர்கள் இருவரும் அறைக்குள் இல்லாததால் பால்கனிக்கு வந்துள்ளார். அப்போது, சிறுவர்கள் இருவரும் பால்கனியில் இருந்து தவறி குடியிருப்புக்கு வெளியே விழுந்துள்ளனர்.

25வது மாடியில் இருந்து விழுந்த இரண்டு சிறுவர்களையும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். சம்பவம் குறித்து தகவலிருந்த காசியாபாத் போலீசார் சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

போக்சோ வழக்கில் கைதானால் குற்றவாளிகளுக்கு என்னென்ன தண்டனைகள்?

முதற்கட்ட விசாரனையில், சம்பவத்தன்று சிறுவர்களின் தந்தை ஊரில் இல்லை என்றும் வீட்டில் தாய் மற்றும் உறவினர் இரண்டு பேர் மட்டும் இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், பால்கனியில் நின்று நிலாவை பார்க்க சென்றவர்கள் தவறி விழுந்தார்களா இல்லை வேறேதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வரும் போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் கூடுதல் தகவல் கிடைக்கும் என தெரித்துள்ளனர்.

அடுத்த செய்தி