ஆப்நகரம்

'ஒரு தாலி தான் கேக்குறேன்'... சென்னை இளம்பெண் திருப்பத்தூரில் தர்ணா

திருப்பத்தூரில் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி சென்னையைச் சேர்ந்த பெண் தனி ஆளாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஊர் பொதுமக்களை பரபரப்பில் ஆழ்த்தியது.

Samayam Tamil 5 Feb 2022, 3:09 pm
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்களம் ஆத்தூரான் வட்டத்தை சார்ந்த தனபால் மகன் கோசல்ராம் (24) சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த சேகர் மகள் ரத்திக்கா (26). எச்.டி.எப்.சி வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கோசல்ராம் மற்றும் ரத்திகாவுக்கும் கடந்த 2019 பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக தெரிகிறது.
Samayam Tamil woman in dharna


இந்நிலையில், சென்னையிலிருந்து ரத்திகா திருப்பத்தூரில் உள்ள ஆத்தூரான்வட்டத்தில் உள்ள கோசல்ராம் வீட்டிற்கு 13 நாட்களுக்கு முன்பு தேடி வந்து அவர்களுடைய வீட்டின் அருகிலேயே தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; கொரோனா ஊரடங்கு காலத்தில் கோசல்ராம் தனது வீட்டில்தான் தங்கியிருந்தார்.

அப்போது, திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன் பின்னர், கோசல்ராம் தன்னை தட்டி கழித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். நான் திருப்பத்தூர் வந்து அருகே உள்ள வீட்டில் உறங்கியும் உணவு அருந்தியும் 13 நாட்கள் கழித்து கோசல்ராம் வீட்டை கண்டுபிடித்துள்ளேன்.

ஜிப்ப தொற... சூட்கேசுக்குள் பெண்... ஆண்கள் விடுதியில் மாணவர் சிக்கிய வீடியோ..!

என்னை இன்று மாலை கோசல்ராமின் குடும்பத்தார் அடித்து உதைத்து அவரிடமிருந்த செல்போனைப் பிடுங்கி சென்றுவிட்டனர் என கூறினார். இதனால் கோபமுற்ற ரத்திக்கா ஒட்டப்பட்டியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து தனியாளாக தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கோசல்ராம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் ரத்திகா எழுந்து சென்றார். இதுகுறித்து ரத்திகாவிடம் போலீசார் விசாரிக்கையில் உணவுத்துறை அமைச்சர் சங்கரபாண்டியன் உறவினரான கோபி என்பவரிடம் டிரைவராக கோசல்ராம் பணிபுரிந்து வருகிறார் எனவும் தகவல் தெரிவித்தார்.

அடுத்த செய்தி