ஆப்நகரம்

எச்சரித்தும் திருந்தாத கணவன்: தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி!

சென்னையில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகப்பட்ட பெண் தனது கணவனை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 26 Jul 2019, 4:55 pm
சென்னையில் பலமுறை எச்சரித்தும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவனை, மனைவியே தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil Crime 1.


சென்னை வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 45). இவரது மனைவி ஞானம்மாள்(45). வேலு கட்டிடத் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் வேலு வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுவதாக சந்தேகம் ஏற்பட்டது.

Also Read: சென்னையில் கார் மோதி வங்கி அதிகாரி பலி; மதுபோதையில் இருந்த ஓட்டுநர் கைது

இது தொடர்பாக கடந்த வியாழன் கிழமை ஞானம்மாள், வேலுவிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே வேலு, மனைவி ஞானம்மாளை அடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். பின்னர் மனைவி, குழந்தைகள் என அனைவரும் உறங்கச் சென்றனர்.

Also Read: அரசுப் பணியாளர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் நடவடிக்கை

ஞானம்மால் இன்று அதிகாலை சீக்கிரமாக எழுந்துள்ளார். நேற்று நடைபெற்ற சண்டையை மனதில் வைத்துக் கொண்டிருந்த ஞானம்மாள், வேலுவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தூங்கிக் கொண்டிருந்த கணவன் வேலுவின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

Also Read: சென்னை தெறிக்கப் போகிறது...சிவப்பு தக்காளி தெரியுது... அட மழைதான்...!!

வேலு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில், காலையில் எழுந்து பார்த்த இவர்களின் குழந்தைகள் தந்தை இறந்து கிடப்பதை பார்த்து அழுதுள்ளன. குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வேலு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக வெங்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஞானம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி