ஆப்நகரம்

திருநங்கையாக மாறுவதற்கு தந்தை அனுமதி மறுத்ததால் இளைஞர் தற்கொலை

சென்னை: பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தந்தை அனுமதி தர மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினரை சோகமடையச் செய்துள்ளது.

Samayam Tamil 13 May 2019, 12:02 pm
சென்னை விருகம்பாகத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர், தனது தந்தை கஜேந்திரனிடம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கேட்டுள்ளார்.
Samayam Tamil பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தந்தை அனுமதி மறுப்பு: இளைஞர் தற்கொலை
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தந்தை அனுமதி மறுப்பு: இளைஞர் தற்கொலை


இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கஜேந்திரன், மகனின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் மனமுடைந்த இளைஞர் வீட்டிலிருந்து வெளியேறி மணலியில் சென்றுவிட்டார்.

அங்கு வசித்து வந்த சில திருநங்கைகளுடன் சேர்ந்து தங்கி வந்த இளைஞரை, மீண்டும் வீட்டுக்கு வரும்படி தந்தை கஜேந்திரன் கேட்டுள்ளார். இதில் தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் நடந்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இளைஞர், அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதுதொடர்பாக மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞரின் கோரிக்கையை ஏற்று குடும்பத்தார் அவரை அரவணைத்து சென்றிருக்கலாம். குடும்பத்தினர் காட்டிய வெறுப்பு தான் இளைஞரின் தற்கொலை காரணமாக அமைந்துள்ளது என திருநங்கைகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி