ஆப்நகரம்

வாட்ஸ் ஆப்புகளில் ஆபாச வீடியோ: சென்னையில் ஒருவரிடம் விசாரணை!!

குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பிய சென்னையைச் சேர்ந்தவரிடம் சிபிஐ விசாரணை மேகொண்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2019, 5:53 pm
ஆபாச படம் பார்ப்பவர்கள் சென்னையில்தான் அதிகம் என்று அமெரிக்காவின் ஃஎப்பிஐ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Samayam Tamil குழந்தைகள் ஆபாச வீடியோ
குழந்தைகள் ஆபாச வீடியோ


இந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிபு ஏடிஜிபி ரவி ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்குவது, பகிர்வது எல்லாம் குற்றம், செல்போன், லேப்டாப்களில் ஆபாச படங்களை பார்க்கவோ, வைத்திருக்கவோ கூடாது என எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சகம் ஆபாச படங்களை பார்த்தவர்கள் ஐபி அட்ரஸ் அடங்கிய பட்டியல் ஒன்றை தற்போது தங்களிடம வழங்கியுள்ளதாகவும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பியவர்கள் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஏழு பேரின் பெயர்கள் வெளியாகி அவர்களது இருப்பிடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.

டெல்லி, சென்னை, ஃபரிதாபாத், காசியாபாத், ஹவுரா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஜெர்மன் நாட்டில் இருந்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சாச்சே டிரப்கே என்ற வாட்ஸ் ஆப் குழு அமைத்து அதன் மூலம் வாட்ஸ் ஆப்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவது தெரிய வந்துள்ளது. ஜெர்மன் அளித்த தகவலின் அடிப்படையில் ஏழு பேரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Department of central Bureau of Investigation List :ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? - வைரலாகும் மீம்ஸ்

சென்னையில் வினோத் கண்ணன் என்பவரிடம் இருந்து சில தகவல்கள் மற்றும் பொருட்களை மீட்டு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற ஆறு பேர் ஜுஹைப் அலி (டெல்லி), கோசிமா (சென்னை), ராகேஷ் குமார் (ஃபரிதாபாத்), அபிஷேக் குமார் திரிபாதி (காசியாபாத்), ஜாய்தீப் ராய் (ஹவுரா), ராஹீஸ் (ஜெய்ப்பூர்) ஆகியோரிடம் சோதனை நடத்தப்பட்டது.

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

இவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், 11 சிம் கார்டுகள், 1 ஹார்ட் டிஸ்க், 2 எஸ்டி கார்டுகள் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களுடன் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பருடன் சேர்ந்து மனைவியை பலாத்காரம் செய்த கணவன்..! இளம்பெண் வாக்குமூலம்...

குழந்தைகளின் ஆபாச படங்களை, வீடியோக்களை மின்னணு வடிவில் அளிப்பது இந்தியாவில் குற்ற வழக்கின் கீழ் வருகிறது. இந்தக் குற்றத்திற்கு உள்ளானவர்களை 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் கூறுகிறது.

குழந்தைகளின் ஆபாச படங்களை, வீடியோக்களை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கும் வகையில், ஐஎஸ்பி வழியாக சோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் வெளியாகும் இணையதளங்களை இந்த ஐஎஸ்பி ப்ளாக் செய்துவிடும்.

அடுத்த செய்தி