ஆப்நகரம்

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 8 பேர் கைது...

ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, செம்மரம் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் வெவ்வேறு கும்பல்கள் கைது செய்யப்பட்டத்ததில், அவர்களிடமிருந்து 28 செம்மரக் கட்டைகள் பரிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Feb 2020, 10:50 pm
சித்தூர் 2 வது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுகேந்தர். யுகேந்தர் உள்பட சக காவல் நிலைய எஸ். ஐகள் சீனிவாசுலு, மல்லிகார்ஜுன ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று சித்தூர் பலமனேர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் அந்த வழியாக வேகமாக வந்தவர்கள் போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றனர்.
Samayam Tamil Untitled


சந்தேகமடைந்த போலீசார் அவர்களைத் துரத்திப் பிடித்து கார்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் வந்த மூன்று பேரையும் சோதனை செய்தனர். அப்போது கார்களில் மறைத்துக் கடத்தப்பட்ட 10 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மற்றொரு சம்பவத்தில் சித்தூர் கிராம மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிகாந்தா ரெட்டியின் மேற்பார்வையில், யாதமரி சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தம் ரெட்டி உள்ளிட்ட போலீசார் சித்தூர் - குடியாத்தம் சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் பங்க் மேலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை..! பதறவைக்கும் சம்பவம்

அப்போது பைக்கில் இருவர் சந்தேகத்திற்கு இடமாக வந்த நிலையில் அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்களுக்கு பின்னால் தொடர்ந்து ஒரு காரில் செம்மரம் கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்த பின்னால் வந்த காரில் வந்த 3 பேர், பைக்கில் வந்த 2பேர் என 5 பேரையும் சித்தூர் கிராம மேற்கு போலீசார் கைது செய்தனர். காரில் கடத்திவரப்பட்ட 18 செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். இரண்டு சோதனைகளிலும் சுமார் 667 கிலோ எடையுள்ள 28 செம்மரங்கள், இரண்டு மஹிந்திரா சைலோ கார், ஒரு ஹோண்டா சிட்டி கார், 3 பைக், ரூ. 2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 45 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சித்தூர் 2 வது நகர, யாதமரி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

'இது என்னோட முடியாது'... டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கைதான சித்தாண்டி..!

இந்த இரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட சித்தூரைச் சேர்ந்த கோபிநாத், செல்வகுமார், வேல், ஜெயசங்கர், ஷேக் மஹ்பூப் பாஷா, வெங்கடேஷ், புருஷோத்தம் சிலகுண்ட்லா புனித்குமார், பாரத், ஆகிய 8பேரையும் போலீசார் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி