ஆப்நகரம்

பால்கர் சாதுக்கள் படுகொலை பின்னணி என்ன? குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிஐடி!

காரில் பயணம் செய்த இரண்டு சாதுக்கள் மற்றும் அவரது ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jul 2020, 1:00 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இரண்டு துறவிகள் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மகாராஜ் கல்ப்விரிக்‌ஷ்கிரி(70), சுஷில் கிரி மகாராஜ்(35) மற்றும் ஓட்டுநர் நீலேஷ் தெல்காடே ஆவர். இந்நிலையில் மெயின் ரோட்டில் சென்றால் போலீசார் தடுத்து நிறுத்திவிடுவர் என்பதால் குறுக்கு வழியில் செல்லுமாறு ஓட்டுநரிடம் சாதுக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிராமப் பகுதிகளிலும், வனப் பகுதிகளிலும் உட்புகுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் கிடிச்சிஞ்சலே கிராமம் வழியே சென்ற போது அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.
Samayam Tamil Palghar Lynching


ஏற்கனவே அந்த கிராமத்தில் குழந்தைகளை கடத்திச் சென்று சிறுநீரகங்களை திருடி விற்றுவிடுவதாக வதந்தி பரவியிருந்தது. இதனால் சாதுக்களை திருடர்கள் என்று பொதுமக்கள் தவறாக நினைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரு சாதுக்கள் மற்றும் ஓட்டுநர் மீது 100க்கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

கோவை: மனைவியை அடித்த கணவன்; தடுக்க வந்த மச்சான்களுக்கு கத்தி குத்து..!

சாதுக்கள் எவ்வளவு கெஞ்சியும் பொதுமக்கள் விடவில்லை. இதுபற்றி தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களை 500க்கும் மேற்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தி கற்களை வீசினர். மேலும் போலீசாரின் வாகனங்களை சாய்த்து அதிகாரிகளை விரட்டி அடித்துள்ளனர்.

இதற்கிடையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சூழலிலும், 800 பேருக்கும் மேற்பட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய விசாரணை முடிவடைந்த நிலையில் தஹானு நீதிமன்றத்தில் 11 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், வதந்தி காரணமாகவே இப்படியொரு கொலை நிகழ்ந்துள்ளது.

தாயைச் சித்திரவதை செய்த தந்தையை கொன்று, போலீசில் சரண்!

திட்டமிட்ட கொலை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 128 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். இவர்கள் மீதான வழக்கு சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

அடுத்த செய்தி