ஆப்நகரம்

Xl வண்டியை விட்டு வைக்காத ஆள்... மக்களே உங்கள் வண்டியை உஷாரா வெச்சிக்கோங்க...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காமராஜபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 11 Apr 2021, 9:56 pm
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் சிறு பகுதியில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil bike thief


இந்நிலையில் சாத்தூர் நகர் பகுதியிலுள்ள காமராஜபுரம் தெருவில் பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தகவல் அறிந்து சாத்தூர் நகர் போலீசார் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

''என்னால் முடியாது'' அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய வங்கி மேலாளர்..!

மேலும், பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும் காவல்துறையினர் பகல் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி