ஆப்நகரம்

திருப்பூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் குடிபோதையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது..

Samayam Tamil 15 Jul 2019, 4:33 pm
திருப்பூரில் குடிபோதையில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Samayam Tamil திருப்பூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு!
திருப்பூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு!


திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் குடிபோதையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.. இதில் ஒருதரப்பை சேர்ந்த 6 பேரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் தாக்கியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் சுருண்டு விழுந்தனர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய போலீசார் அரிவாள் வெட்டுப்பட்டவர்களை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரிவாள் வெட்டுப்பட்டவர்களிடம் விசாரித்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்த வாலிபர் அருள் என்பதும் படுகாயமடைந்தவர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜமாணிக்கம், பிரதாப், விக்னேஸ், பார்த்தீபன், ஏழுமலை என்பதும் இவர்கள் ஆண்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக கூறப்படும் டாஸ்மாக் பாரால், இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி