ஆப்நகரம்

'மாநாடு' படத்தின்போது மாறி மாறி தாக்கிக்கொண்ட ரசிகர்கள்... தியேட்டரை விட்டு ஓடிய மக்கள்

கோவையில் மாநாடு திரைப்படத்தின் போது தியேட்டரில் இரு தரப்பினர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 30 Nov 2021, 3:55 pm
மாநாடு வெளியான தியேட்டர்களில் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Samayam Tamil maanadu fans clash


நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தியேட்டரில் மாநாடு படம் திரையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு காட்சியின் போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் ஓடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் கைதட்டி விசிலடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் எதற்கு இப்படி கூச்சல் இடுகிறீர்கள்? மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? என கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். படம் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் வெளியே ஓடிவந்தனர். இந்த தாக்குதலில் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த முகமது நிஷார் (20) , ஜி.எம். நகரைச் சேர்ந்த கௌதம் (20) ஆகிய இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

மது போதையில் காவலரின் அட்டூழியம்... பெண் பயணிகள் அலறல்... சென்னை சம்பவம்

சம்பவம் குறித்த தியேட்டர் நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது. போலீசார் விரைந்து வந்து காயமடைந்த இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 8 பேர் மீது பந்தய சாலை காவல்துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி