ஆப்நகரம்

செஞ்சி அருகே மரத்தில் சடலமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவன்- கொலை செய்யப்பட்டாரா?

செஞ்சி அருகே 10-ம் வகுப்பு மாணவன், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்பு! இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறெதும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டரா என விசாரித்து வருகின்றனர்!

Samayam Tamil 16 Aug 2019, 1:31 pm
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, ஆடு மேய்க்க சென்ற 10-ம் வகுப்பு மாணவன், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil செஞ்சி அருகே மரத்தில் சடலமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவன்- கொலை செய்யப்பட்டாரா?
செஞ்சி அருகே மரத்தில் சடலமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவன்- கொலை செய்யப்பட்டாரா?


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காந்திநகரில் வசிப்பவர் ஏழுமலை, கட்டிட தொழிலாளி. இவரது மகன் கோபி (15) செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கோபி, சுதந்திர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது கோபியை ஆடு மேய்த்து வருமாறு அவரது பெற்றோர் கூறினர். இதையடுத்து கோபி ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுபகுதிக்கு சென்றார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் கோபி வீடு திரும்பவில்லை.

வேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

இதனால் பதறிய அவனின் பெற்றோர் கோபியை பல இடங்களில் தேடினர். இந்நிலையில், இன்று காலை, செஞ்சியில் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள மரத்தில், கோபி தூக்கில் சடலமாக தொங்குவதாக பெற்றோருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து ஏழுமலை மற்றும் உறவினர்கள், சங்கராபரணி ஆற்றுக்கு சென்று பார்த்தபோது அங்கு கோபி மரத்தில் தூக்குமாட்டி சடலமாக தொங்குவதை பார்த்து கதறியழுதனர். இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீசார், உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உன்னால தான், இல்ல நீ தான் காரணம்- செமயா அடிச்சுக்கிட்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்!

மேலும் இது தொடர்பாக கோபியின் தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏழுமலை கூறுகையில், கோபி தூக்குமாட்டி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. அவனது கால்கள் மரத்தில் இருந்து தரையில் படும்படி உள்ளது. எனவே அவனை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு உள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என கூறினார்.

மாணவன் கோபி தூக்குமாட்டி தற்கொலை செய்தாரா? அல்லது வேறெதும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டரா போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குறியீடு போட்டு கொள்ளையடிக்க வரும் வடமாநில ஆசாமிகள்; அதிர்ச்சி பின்னணி- எச்சரிக்கை ரிப்போர்ட்!

அடுத்த செய்தி