ஆப்நகரம்

சென்னை அருகே நடு ரோட்டில் வாலிபரை வெட்டி கொன்ற கல்லூரி மாணவி, ஆண் நண்பரும் கைது..!

கேளம்பாக்கம் அருகே காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி ஆண் நண்பருடன் சேர்ந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Dec 2021, 12:51 pm
ஏற்கனவே திருமணமாகிய நிலையில் கல்லூரி மாணவியை திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு கொடுத்து வந்ததால் மாணவி அவருடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil chengalpattu murder


செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆன தனியார் கல்லூரியில் பணிபுரியும் செந்தில் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

22 வயதான அந்த கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தொந்தரவு கொடுத்து வந்த செந்தில் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 'ஏற்கனவே திருமணமான நீங்கள் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?' என்று கேட்டபோது பேச்சுவார்த்தை வாக்குவாதமாக முற்றியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவியும் அவரது நண்பர் அருண்பாண்டியனும் சேர்ந்து செந்திலை சரமாரி வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

கொலை செய்து விட்டு அங்கிருந்து கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றனர். சம்பவத்தை பார்த்த அருகில் உள்ளவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் விசாரித்தபோது கல்லூரி மாணவியை ஏற்கனவே திருமணமான செந்தில் என்பவர் ஒருதலைபட்சமாக காதல் என்ற பெயரில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிய தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க செந்திலிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி, வாக்குவாதம் முற்றியதால் கொலை செய்து விட்டதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சன்னி லியோன் இந்த மண்ணில் ஆடக்கூடாது... பேனர்கள் கிழிப்பு... புதுச்சேரியில் வெடிக்கும் போராட்டம்

கைதான 22 வயதான மாணவி அவருடைய ஆண் நண்பர் அருண்பாண்டியன் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே, திருமணமான ஆண், கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த மாணவி அவருடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி