ஆப்நகரம்

பட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ஹரியானாவில் கல்லூரி வளாகத்தின் முன்பு மாணவி மர்ப நபரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Oct 2020, 4:12 pm
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள பாலப்கர் என்ற பகுதியில் அமைந்துள்ள கல்லூரியில் படித்து வந்தவர் நிகிதா தோமர் (21). இவர் கடந்த திங்கட்கிழமை (நேற்று) அன்று தேர்வெழுத கல்லூரிக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil haryana girl death


பின்னர் தேர்வை முடித்துவிட்டு மாலை தனது தோழியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, காரில் வந்த இரு மர்ம நபர்களில் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் நிகிதாவை மறித்து காரில் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, நிகிதா அவரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து, பின்னே நோக்கி ஓடிச் சென்ற அந்த நபர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால், மாணவியின் தலையில் சுட்டுள்ளார்.


இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே சுருண்டு விழுந்தார். இதைத் தொடர்ந்து, அந்த நபர்கள் அங்கிருந்து, வந்த காரிலேயே அதிவேகமாக தப்பியோடிச் சென்றனர். தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் நிகிதா ஏற்கெனெவே உயிரிழந்து விட்டதாக அங்கு தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உறக்கத்தில் இருந்த மாணவி, கதவுடைத்து உள்ளே சென்ற ரவுடிகள்..! நள்ளிரவில் கொடூரம்

பின்னர், இது குறித்து தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற நபரை கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து இன்னமும் தெரியவரவில்லை. இதனிடையே, நிகிதா சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி