ஆப்நகரம்

கல்லூரிக்கு போனாலும் தொல்லை, வீட்டில் இருந்தாலும் தொல்லை... மாணவி தற்கொலை

தருமபுரி அருகே காதல் தொந்தரவால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Mar 2021, 5:49 pm
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு லிசாலினி (19) என்ற மகள் இருந்தார். இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லிசாலினியை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கவுண்டர்கொட்டாயைச் சேர்ந்த தவமணி (26) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்


கல்லூரிக்கும் சென்று வரும் லிசாலினியை பின் தொடர்ந்து வந்த தவமணி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். பலமுறை மாணவி எச்சரித்தும் அவர் விடவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லிசாலினியின் வீட்டுக்கு தனது நண்பர்கள் ஆறு பேருடன் சென்றுள்ளார் தவமணி. அப்போது, என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்? ஒழுங்காக என்னை திருமணம் செய்துகொள் என்று மிரட்டிவிட்டு வந்துள்ளார்.

அதனையடுத்து, நேற்று காலை விசாலினி வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளர். அதனை கண்டு அதிர்ந்துபோன பெற்றோர் அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், விசாலினி போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

பசிக்கு சோறு போட்ட பெண் கதற கதற கொலை..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தவமணியை கைது செய்து நண்பர்கள் 6 பேரை தேடி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி