ஆப்நகரம்

பிளஸ்-2 மாணவி கர்ப்பம்: வேலை காட்டிய கல்லூரி 'மைனர் குஞ்சுவை' தூக்கிய போலீஸ்!

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 23 Jan 2022, 6:34 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 17 வயது சிறுமி. பிளஸ்-2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவர். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து நெருங்கி பழகி வந்தனர்.
Samayam Tamil மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்


இந்த சூழலில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டு அடித்து மீறியுள்ளனர். மேலும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறியதால் மாணவியும் அதற்கு இசைவு கொடுத்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். ஆனால், கல்லூரி மாணவர், அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வில்லத்தனம் செய்ததாக கூறப்படுகிறது.

காதல் விவகாரம்: கல்லூரி பேராசிரியை தூக்கு போட்டு தற்கொலை..!

தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள மாணவி, இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி