ஆப்நகரம்

குமரி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..! காரணம் தெரியாமல் குழப்பம்

கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2021, 7:26 pm
கன்னியாகுமரி மாவட்டம் லூர்து மாதா தெருவைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு 20 வயதாகிறது. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்து வந்த மேரி கடந்த சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil file pic


இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு மேரி படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை கண்ட பெற்றோர் அலறியடித்து அவரை கீழே இறக்கி அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அங்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மக்களின் தற்கொலையில் சந்தேகமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அடித்து கொலையா? ஹேமந்த் மட்டுமே காரணமா? சித்ரா வழக்கில் நாளை கெடு!

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி