ஆப்நகரம்

தேர்வுக்கு வந்த மாணவி கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை... கடலூரில் பரபரப்பு

கடலூர் தனியார் கல்லூரி கழிப்பறையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 17 May 2022, 1:09 pm
விழுப்புரம் மாவட்டம் சின்னப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் தனலட்சுமி (19). இவர் கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil student


இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி கல்லூரியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று அங்கு அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பேக்கை சோதனையிட்டபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், தனக்கு தேர்வு எழுத பயமாக உள்ளதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதி இருந்ததாக சொல்லப்படுகிறது.

தலை எங்கே..? அடையாற்றில் திணறி வரும் போலீஸ்... திமுக பிரமுகர் கொலை வழக்கில் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி