ஆப்நகரம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை..! இன்னொரு நுங்கம்பாக்கம் சம்பவம்

மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரும் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி

Samayam Tamil 23 Sep 2021, 3:23 pm
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வந்த மாணவி ஸ்வேதா என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மாணவியை கத்தியால் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலமாக குத்தியுள்ளார்.
Samayam Tamil கல்லூரி மாணவி குத்திக்கொலை


இதனால் மாணவி நிலைதடுமாறி விழவே, வாலிபரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஸ்வேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

'கணவன் எங்கே?' பதில் சொல்ல முடியாமல் பெண் மருத்துவர் தற்கொலை..! திருச்சியில் சோகம்

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல கடந்த 2016 ஜூன் மாதம் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) என்பவர் பயணிகள் கண்முன்னே இளைஞரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அடுத்த செய்தி