ஆப்நகரம்

சகோதரியை காதலித்ததால் நண்பரை கொலை செய்த அண்ணன்

சென்னை தனியாா் கல்லூரியில் படித்து வந்த மாணவா் உடன் படித்து வந்த நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 27 Jun 2019, 9:50 am
சென்னையில் சகோதரியை காதலித்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் உடன் படித்து வந்த நண்பரை கல்லூரி வாயிலில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil murder


ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கென்டமெலா ஷெவன்குமார் (20) சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை பிரபல தனியாா் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்தார். கல்லூரி முடிந்து கென்டமெலா ஷெவன்குமார் மற்றும் மாணவர்கள் வெளியில் வந்தனர்.

திடீரென கென்டலெமா ஷெவன்குமாரை மாணவர்கள் சண்முகம் மற்றும் அவரின் நண்பர்கள் சரமாரியாகத் தாக்கினர். அதை சில மாணவர்கள் தடுத்தனர்.கென்டலெமா ஷெவன்குமார் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் சடலம், பிரேதபரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடா்பான விசாரணையில், ஷெவன் குமாா், சண்முகத்தின் உறவுக்கார பெண்ணை காதலிப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடா்ந்து சண்முகம் ஷெவன் குமாரை எச்சரித்துள்ளாா். இதனை கண்டுகொள்ளாத ஷெவன், அப்பெண்ணிடம் தொடா்ந்து செல்போன் மூலம் பேசிவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் தனது நண்பா்களுடன் இணைந்து ஷெவன் குமாரை கொலை செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் உடன் பழகிய நண்பரை கல்லூரி வாயிலிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி