ஆப்நகரம்

சவுக்கு சங்கரை கைது செய்ய புகார்.. திமுகவினர் போடும் பிளான் என்ன..?

தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவு செய்ததாக சவுக்கு சங்கர் மீது புகார்.

Samayam Tamil 21 Mar 2023, 7:41 pm
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பரில் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil savukku shankar


இந்த அறிவிப்பு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. காரணம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என அரசு குண்டு தூக்கி போட்டுள்ளதால் யார் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

அரசு பள்ளி ஆசிரியரை துரத்தி துரத்தி அடிக்கும் நபர்.. கோவில்பட்டியில் பரபரப்பு

இந்நிலையில் இந்த அறிவிப்பை சுட்டிக்காட்டி முதல்வரை தரக்குறைவாக சித்தரித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தாக குற்றம் சாட்டி, சவுக்கு சங்கரை கைது செய்ய வேண்டும் எனவும், சவுக்கு சங்கரின் ''வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர்'' டுவிட்டர் பக்கத்தை முடக்க கோரியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி