ஆப்நகரம்

பப்ஜி மதன் கைது..! ரவுடி பேபி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் டிக்டாக் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன

Samayam Tamil 18 Jun 2021, 5:13 pm
பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீசாருக்கு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.
Samayam Tamil கோப்புப்படம்


டிக்டாக், பப்ஜி தடை செய்யப்பட்ட பின்னர் அச்செயலிகளால் பிரபலமாகியவர்களில் சிலர் வியூஸ்க்காக சர்ச்சையாக பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரவுடி பேபி சூர்யா என்ற பெண் நீண்ட நாட்களாக யூடியூபில் ஆபாச வார்த்தைகளை பேசியும், தனக்கு பிடிக்காதவர்களை திட்டியும் வீடியோ வெளியிட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

சுப்பு லெட்சுமி என்கிற ரவுடிபேபி சூர்யா பப்ஜி மதனை விட மிக ஆபாசமாக பேசியும் சிலருக்கு கொலைமிரட்டல் விடுத்து வருகிறார் என்றும் என்னோடு பேசலாம் வாங்க என்று சொல்லி வாட்சப் நம்பரை கொடுத்து பணம் பரிப்பு நடத்தி வருவதாகவும் சமூக ஊடக வழியாக புகார் வந்துள்ளது.


இந்நிலையில், அவரை கைது செய்ய சொல்லி திருப்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்து கிடப்பில் போடப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் தனிபிரிவுக்கு புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தை புரட்டிப்போடும் கைது சம்பவங்கள்..! ராஜகோபாலன் முதல் பப்ஜி மதன் வரை...

தற்போது பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளதால் சமூக ஊடகங்களை தவறாகவும், இழிவாகவும் பயன்படுத்தி வருபவர்கள் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களது யூடியூப் சேனல்களை தடை செய்யவும் பரவலாக கோரிக்கைகள் வருகின்றன.


சமூக ஊடகங்கள் இனி நல்ல கருத்துக்களையும், தகவல்களையும் பதிவிட மட்டுமே செய்லபடக்கூடிய வகையில் மாற வேண்டும் என்றால் சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி