திருச்சி மாநகரில் பிரபல அரசியல்வாதியாக இருப்பவர் வணக்கம் சோமு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான ஈர்ப்பால், 2009ல் அதிமுகவில் இணைந்தார். இவரது செயல்பாடுகள் கட்சி தலைமையிடம் நற்பெயரை பெற்றுத் தந்தன. இதன் எதிரொலியாக மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவி கிடைத்தது. இதன்மூலம் பிரபல அரசியல்வாதியாக உருவெடுத்தார். அதிமுக தலைமை கூறும் விஷயங்களை தீவிரமாக செயல்படுத்தியவர்.
பலாத்கார பூமியான ராஜஸ்தான் - 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!
திருச்சியில் அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். இவர் மீது தற்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, திருச்சியை சேர்ந்த உதவி பேராசிரியை ஒருவரை கடத்திவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, தனியார் கல்லூரியில் மகாலட்சுமி என்பவர் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.
இப்படியும் ஒரு கொடூர தாய்; பச்சிளம் பெண் குழந்தை கொன்று புதைப்பு- அதிர்ச்சி வாக்குமூலம்!
அப்போது ஆம்புலன்ஸ் ஒன்றில் அதிமுக பிரமுகர் வணக்கம் சோமுவின் ஆட்கள் வந்துள்ளனர். அவர்கள் மகாலட்சுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி செல்போன் மூலம் போலீசாருக்கு மகாலட்சுமி தகவல் அளித்துள்ளார்.
அவர்கள் செல்போன் சிக்னல் மூலம் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை அறிந்து கொண்ட கடத்தல்காரர்கள், துவரங்குறிச்சி என்ற இடத்தில் மகாலட்சுமியை இறக்கி விட்டுள்ளனர்.
போலீஸ் மீதே என்கவுண்டர் முயற்சி: இந்து மகாசபா நிர்வாகி கைது!
இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். உண்மையில் கடத்தி சென்றது அதிமுக பிரமுகர் வணக்கம் சோமுவின் ஆட்களா? இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை? இந்த கேள்விகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவரவில்லை.
அதேசமயம் மகாலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஒருதலைக் காதல் காரணமாக மகாலட்சுமியை கடத்தி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக பிரமுகர் வணக்கம் சோமுவிற்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தால் திருச்சி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பலாத்கார பூமியான ராஜஸ்தான் - 24 மணி நேரத்தில் 3 பேருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!
திருச்சியில் அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். இவர் மீது தற்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, திருச்சியை சேர்ந்த உதவி பேராசிரியை ஒருவரை கடத்திவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, தனியார் கல்லூரியில் மகாலட்சுமி என்பவர் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.
இப்படியும் ஒரு கொடூர தாய்; பச்சிளம் பெண் குழந்தை கொன்று புதைப்பு- அதிர்ச்சி வாக்குமூலம்!
அப்போது ஆம்புலன்ஸ் ஒன்றில் அதிமுக பிரமுகர் வணக்கம் சோமுவின் ஆட்கள் வந்துள்ளனர். அவர்கள் மகாலட்சுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி செல்போன் மூலம் போலீசாருக்கு மகாலட்சுமி தகவல் அளித்துள்ளார்.
அவர்கள் செல்போன் சிக்னல் மூலம் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை அறிந்து கொண்ட கடத்தல்காரர்கள், துவரங்குறிச்சி என்ற இடத்தில் மகாலட்சுமியை இறக்கி விட்டுள்ளனர்.
போலீஸ் மீதே என்கவுண்டர் முயற்சி: இந்து மகாசபா நிர்வாகி கைது!
இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். உண்மையில் கடத்தி சென்றது அதிமுக பிரமுகர் வணக்கம் சோமுவின் ஆட்களா? இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை? இந்த கேள்விகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவரவில்லை.
அதேசமயம் மகாலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஒருதலைக் காதல் காரணமாக மகாலட்சுமியை கடத்தி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக பிரமுகர் வணக்கம் சோமுவிற்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தால் திருச்சி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.