ஆப்நகரம்

கிரண்பேடிமீது காவல் நிலையத்தில் புகார்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கிரண்பேடி மீறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 May 2019, 8:24 pm
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kiranbedi2


புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் கிரண்பேடி மீது புகாரளித்துள்ளனர். அதில் குறைதீர்ப்பு என்ற பெயரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களுடனும், அதிகாரிகளுடனும் கிரண்பேடி பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆளுநரோ, அதிகாரிகளோ மக்களின் குறைகளை கேட்க தனியார் ஊடகங்களையோ வலைத்தளங்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கிரண்பேடி மீறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. இது பல நேரங்களில் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. அந்த வகையில் இருதரப்பிலும் அதிகார தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்திற்கும் மேலாக கிரண்பேடி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி